Posts

Showing posts from March, 2024

அபிராமி அந்தாதி பாடல் #3 - உரை

Image
 சம்சார பந்தம் நீங்க அறிந்தேன் எவரும் அறியா மறையை. அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே. திருவே! வெருவிப் பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.  மறை : வேதம். நான்மறை என்றால் நான்கு வேதங்கள் என்று அர்த்தம். மிகவும் நுணுக்கமான ஆன்மீக விஷயங்களை, வெளிப்படையாக இல்லாமல் சூசகமாக, மறைமுகமாக, உருவகங்களையும் (metaphor) குறியீடுகளையும் (symbolism) கொண்டு விளக்குவதால் இந்தப் பெயர். இதனால் தான் "எழுதா மறை", "எவரும் அறியா மறை" என்கிறார் அபிராம பட்டர். [Vedas are the ultimate knowledge/philosophy explained using metaphors/symbols with hidden meanings.] ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் நமது வேதங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள இடங்களில், இவை இறைவனைத் துதிக்கும் பாடல்களின் தொகுப்பு, தொகுதி ("The Vedas are a collection of sacred hymns") என்று இந்தியவியல் (Indology) அறிஞர்கள்   கூறுகின்றனர்.  "இயற்கையைக் கண்டு பயந்த, வியந்த பண்டைய  இந்தியர்கள், அந்த இயற்கை சக்திகளை வெவ்வேறு தெய்வங்களாக, கடவுள்களாகக் கற்பனை செய்து அவர்...

சொர்க்கமும் நரகமும்

Image
நாடகங்களிலும் திரைப் படங்களிலும் மட்டுமே இவற்றைப் பார்த்து அறிந்து கொண்டுள்ள நம்மில் பலருக்கு இவற்றைப் பற்றிய தெளிவு இல்லை. பெரும்பாலானோர், நமது புராணங்களில் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் கூறப்பட்டுள்ள விவரங்கள், விளக்கங்களை மேலோட்டமாக, literal ஆக அர்த்தம் பண்ணி கற்பனை செய்பவர்கள் தாம். சொர்க்கம் என்பது ஆடம்பர வசதிகள் நிறைந்த, பொன்னும் மணியும் கொட்டிக்கிடக்கும் அலங்கார மாளிகை போலவும், ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற அழகான தேவலோகப் பெண்கள் நடனம் ஆடி மகிழ்விக்கும் இடம் என்றும் திரைப்படங்களைப் பார்த்து பெரும்பாலானோர் ஒரு கற்பனை உலகத்தை/பிம்பத்தை (இமேஜ்) மனதில் வைத்து இருக்கிறோம்.  இதற்கு நேர்மாறான நரகம் என்பது கொடூரமான தண்டனைகள் தரப்படும் இடம் என்று சில புராணங்களிலே சொல்லப்பட்டு இருப்பதன் அடிப்படையில் திரைப்படங்களில் வி வ ரிக்கப்பட்டு இருப்பதும் நமக்கு பரிச்சயம். உண்மையில் சொர்க்கம் , நரகம் என்றால் என்ன? இதைப்பற்றி விரிவாக விளக்குவதற்கு முன் மரணம் என்றால் என்ன என்று புரிந்து கொள்வது முக்கியம். மரணத்துக்குப் பின் நம்முடைய உயிர், ஜீவன் என்னவாகிறது? என்பதைப் பற்றி நம்முடைய...

அபிராமி அந்தாதி: பாடல் #2 - உரை

Image
 பிரிந்தவர் ஒன்று சேர பாடல் #2: துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதி கொண்ட வேரும், பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே.  " துணையும், தொழும் தெய்வமும் , பெற்ற தாயும்" ஆகிய மூன்று சொற்களும், சிலேடையாக, இரண்டு அர்த்தங்கள் கொண்டதாகப் படுகிறது எனக்கு. இவை அபிராமியின் அடியவர்கள், சிவபெருமான் இருவருக்கும் பொருந்தும் என்று இங்கே கருத இடம் உண்டு: சிவபெருமானின் இடப் பாகத்தில்( பாடல் #17 ), என்றும் அவரைப் பிரியாமல் இருப்பவள். (பாடல் #8ல் "எந்தை (என் தந்தை, அதாவது சிவன்) துணைவி"  என்பார்)   சிவபெருமானே பூஜிக்கும், வணங்கும் தேவி அவள் (பாடல்  #7, #26) சிவபெருமானைப் பெற்றவள் அன்னை அபிராமி (பாடல்  #25). இதைப் பற்றிய விளக்கத்தைப் பாடல் #25ல் விரிவாகப் பார்க்கலாம். தொழுவது = வழிபாடு செய்வது #101: தொழுவார்க்கு வேண்டுவது = எதையேனும் வேண்டிக் கேட்பது, பிரார்த்தனை செய்வது  வணங்குவது  = கும்பிடுவது, தோத்திரம் செய்வது  இவை எல்லாம் ஒரே வகை அல்ல. ஒன்பது...

அபிராமி அந்தாதி பாடல் #1 - உரை

Image
நல்வித்தையும் ஞானமும் பெற உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை, துதிக்கின்ற மின்கொடி. மென்கடிக் குங்கும தோயம் என்ன? விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.  யோகத்தில் இருந்தபடி ஆழமாக தியானம் செய்பவர்களுக்கு மனக்கண்ணில் செக்கச் செவேலென்ற சிவப்பு நிறத்தில், பிரகாசமான ஒளி தெரியும். இந்த ஒளி வெள்ளத்தையே பாடல் #47ல் "சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே" என்று சொல்லுவார். இதை அன்னையின் வடிவாக வர்ணிக்கும் பட்டர், நமக்கு புரிவதற்காக, நாமும் அந்த தரிசனத்தை visualize செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். சிவப்பு நிறம் உள்ள, மேன்மையான  விஷயங்களை இங்கே லிஸ்ட் போடுகிறார்.  லலிதா ஸஹஸ்ர நாமத்தில், நாமாவளியை ஆரம்பிக்கும் முன்பாகச் சொல்லும் த்யான ஸ்லோகத்தின் தொடக்கமே " ஸிந்தூரானன விக்ரஹாம் " என்று தான் வரும். ஸம்ஸ்க்ருதத்தில்  "ஆனன" என்றால் முகம். கஜானன என்றால் யானை முகன். ஸிந்தூரானன என்றால் குங்குமம் போன்ற சிவந்த முகம் என்று அர்த்தம். அபிராம பட்டரும் தன்  முதல் பாடலிலேயே அதையே சொல்கிறார். அபிராமி அந...

அபிராமி அந்தாதி - உரை: காப்பு

Image
 காப்பு (கட்டளை கலித்துறை) தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே. தாரமர் =  தார்: ஆண்கள் அணிவது, இரண்டு முனைகளும் ஒன்றாகச் சேர்த்து கட்டப்படாத பூச்சரம். மாறாக, இரண்டு முனைகளும் கட்டி, பெண்கள் அணிவது மாலை. தார்: ஆண்கள் அணிவது மாலை: பெண்கள் அணிவது  கொன்றை = ஐந்து மஞ்சள் நிற இதழ்களை உடைய பூ. தாவரவியல்  பெயர் = கசியா ஃபிஸ்டூலா (Cassia fistula @ Golden Shower/Indian laburnum). தாய்லாந்து நாட்டின் தேசிய மலர் என்று கொண்டாடப்படும் இந்தப் பூ, கேரளாவில் அந்த மாநிலத்தின் மலர்ச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள மொழியில் "கனிக் கொன்னா" அல்லது "விஷுக் கொன்னா" என்று அழைக்கப் படுகின்றது. அவர்களது புது வருடப் பிறப்பான "விஷு" பண்டிகையில் முக்கிய இடம் வகிப்பதால் கொன்றைப் பூவுக்கு இந்தப் பெயர். அப்பர் தேவாரம்: மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே: கொன்றை மலரின் ஐந்து இதழ்க...

அபிராமி அந்தாதி: பின்னணி, வரலாறு

 அநேகம் பேருக்கு அபிராமி அந்தாதி பிறந்த கதை ஏற்கனேவே தெரிந்து இருக்கும்.  அபிராம பட்டரின் இயற்பெயர் சுப்ரமணியம்.  18 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட சரபோஜி ( Sarabhoji I Bhonsle : 1712 - 1728 ) மன்னரின் காலத்தில், மாயவரம் எனப்படும் மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூரில் வாழ்ந்தவர்.  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பஞ்சாங்கம் படிக்கும் பணியைச் செய்து வந்த இவர் மிகவும் தீவிரமான சக்தி உபாசகர். அந்தக் கோவிலில் உள்ள அபிராமி அம்மனை "பாலா திரிபுரசுந்தரி" யாகவே பாவித்து ஸ்ரீவித்யா உபாஸனை செய்து வந்தார். ஒரு தை மாத அமாவாசை தினத்தில் சரபோஜி ராஜா அந்தக் கோயிலுக்கு வழிபட வந்த போது, கோயில் பிரகாரத்தில் தியானத்தில் இருந்தார் சுப்ரமணிய பட்டர். பரிவாரம் சூழ ராஜா வருவதைக் கூட கவனிக்காமல் கண்களை மூடி உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ராஜா, அருகில் இருந்தவர்களிடம் "இவர் யார்?" என்று கேட்டார்.   அவர் கோவிலில் பஞ்சாங்கம் படிப்பவர் என்றும் தேவி உபாசகர் என்றும் ராஜாவிடம் சொன்னார் கோவில் குருக்கள் .  ஆனால் இவரது நடவடிக்கைகள் பிடிக்காத, இவர் மீது பொறாமை கொண்ட...