அபிராமி அந்தாதி பாடல் #5 - உரை
[மனக்கவலை மறைந்திட] பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே. 5 புரை = உயர்வான, மேலான, மூத்த (புரை உயர்வு ஆகும் - தொல்காப்பியம் 2-8-4). முப்புரை = திரிபுரை, மும்மடங்கு மேலானவள் #626 செப்புரை : செப்புக் கிண்ணங்களை போன்ற புணர்முலை புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல்: மருங்குல் = இடுப்பு. : முலை:ஸ்தன பாரங்கள். சிவபெருமானைக் கூடுவதால் அழுந்திய முலைகளால் வருந்திய இடுப்பை உடையவள்; வஞ்சிக் கொடி போன்றவள். வஞ்சிக்கொடி என்பது அமிர்தவல்லி எனப்படும் Tinospora cordifolia. இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. வல்லி என்றால் கொடி என்று அர்த்தம். அமிர்தவல்லி (Tinospora Cordifolia) பாடல் 100ல் 'குழையத் தழுவிய கொன்றை அந்தார் கமழ் கொங்கை வல்லி': சிவபெருமானைத் தழுவுவதால் அவர் அணிந்திருக்கும் கொன்றைத் தாரின் வாசனை அம்பாளுடைய ஸ்தன பாரங்களில் படிந்திருக்கும் என்றும், கொடி போன்றவள் எ